மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்…
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் நோயாளிக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பின்புறத்தில் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசி சிரஞ்சுகள். மருத்துவர்கள் பயன்படுத்தும் முக கவசம் கையுறைகள் மற்றும் நோயாளிகள் கட்டப்பட்டும் ரத்தக்கரைகள் படிந்த கட்டுகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு மூட்டை மூட்டையாக குவிக்கப்பட்டுள்ளது .
இதனால் மருத்துவமனையின் பின்புறத்தில் துர்நாற்றம் வீசப்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மருத்துவமனைகளில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் நாட்கணக்கில் தேக்கி வைத்து வருவதாகவும் நோயாளிகளும் பொதுமக்களும் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்
மேலும் இந்த மருத்துவக் கழிவுகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தராமல் மொத்தமாக அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாகவும் இதனால் மருத்துவக் கழிவுகளை தரம் பிரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.