மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற மூன்று நாட்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின் படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற ஒன்பதாம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது . இதனால்  நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1200 நாட்டுப் படகுகள்  இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1200 நாட்டுப் படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களைச் சார்ந்த சுமார் 10,000 மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர் .

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா ,கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் பலத்த காற்றானது 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அறிவுறுத்தியுள்ளது .

இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற ஒன்பதாம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது . இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பத்து கடலோர மீனவ கிராமங்களைச் சார்ந்த பத்தாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *