அட்மிசன் போடவந்த மாணவர்களுக்கு மாலை மரியாதை அரசு உதவி பெறும் பள்ளி அதிரடி…!

அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை. புதிதாக சேர்ந்த மாணவர்கள் மாலை அணிவித்து மேள தாளத்துடன் பள்ளிக்கு அழைத்து வருகை. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிக்குச் சென்றது போல் மஞ்சள் பையில் சிலேட்டுப் புத்தகங்களுடன் மாணவர்கள் வருகை.

கடந்த சில ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது. இன்று இப்பள்ளியில் புதிதாக 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் .

இவர்கள்  அனைவருக்கும் மாலைகள் அணிவித்து மேள தாளத்துடன் கிராமத்தின்  முக்கிய வீதிகள் வழியாக  மரியாதையுடன் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிக்கூடத்திற்கு வந்ததுபோல் மஞ்சள் பையுடன் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்தனர். மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *