வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓட்டம்..!

நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பணியில் நெல்லை காவல் துறையினர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம் ஜி ஆர் பேருந்து நிலையத்திற்கு அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது

இந்த இல்லத்தில் திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 20 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் உள்ளனர் இந்நிலையில் இன்று இரவு உணவே வாங்கிக் கொண்ட சிறுவர்கள் திடீரென கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வார்டனை தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர் 

இது தொடர்பாக கூர்நோக்கு  இல்லத்தில் உள்ள வார்டன் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன் நெல்லை மாநகர கிழக்கு காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்

மேலும் நெல்லை பாளையங்கோட்டை எம் ஜி ஆர் பேருந்து நிலையம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் இந்த சிறுவர்கள் தப்பி அங்கு ஓடி உள்ளார்களா என்பது தொடர்பாக தேடும் பணியில் நெல்லை மாநகர காவல் துறை ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் நேற்று தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த்  அரசினர் கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்து இங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாகவும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார்

இந்நிலையில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவம் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி உள்பட அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *