துப்பாக்கியுடன் இந்து முன்ணணியின் முக்கிய நபர் கைது…!

கோவையில் துப்பாக்கியுடன் பிடிபட்ட இந்து முன்னனி பிரமுகர் அயோத்தி ரவி ஆயுத சட்டத்தின் கீழ்  கைது – ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர் விசாரணை.

கோவை இந்து முன்னனி மாவட்ட துணை தலைவர் அயோத்தி ரவி என்கிற ரவிச்சந்திரனை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது இடுப்பில் நாட்டு துப்பாக்கியுடன் பிடிபட்டார்.

பின்னர் அவரது வீட்டில் சோதனையிட்ட போது மேலும் ஒரு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. உரிமம் இல்லாமல் துப்பாக்கியுடன் வலம் வந்த அயோத்தி ரவியிடம் உதவி கமிஷ்னர் சதீஸ்குமார் தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்து முன்னனி நிர்வாகி அயோத்தி ரவியை  25(1)(a) arms act  ஆயுத சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *