பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு பணியாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 4000 பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுவது மட்டுமன்றி அரசு பணிகள் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக இந்த போராட்டமானது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட ஒப்படை விடுப்பு மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 4000 அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு அலுவலகங்களில் பணியாளர்களின்றி காலி நாற்காலி மேஜைகளாக உள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.‌ மேலும் பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்கள் இதனால் அவதி அடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *