அரசு பள்ளி ஆசிரியர் வேலை வேண்டுமா? 25 லட்சம்… பண மோசடி நபர் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழுதப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் வயது 25 த/ பெ செல்வம் என்பவர் கல்லாவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு  அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் தவணை முறையில் தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புஷ்ப லிங்கம் வயது 34 த/பெ வஜ்ரவேல் என்பவர் ரூபாய் 24,80,000 பணத்தை வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல் பணத்தை திருப்பி கேட்டால் அதையும் கொடுக்காமல் இழுத்து அடித்து வருகிறார் 

என்னை ஏமாற்றிய புஷ்ப லிங்கத்திடம் இருந்து என்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கோரியும் மேலும் பணம் திருப்பி கேட்கும் பொழுது என்னை தகாத வார்த்தையில் திட்டியும் மிரட்டியும் வருவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட.கல்லாவி.காவல்துறையினர்.புஷ்ப லிங்கம் என்பவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *