குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவி தொகை… பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் கொண்டாட்டம்

சட்டமன்ற கூட்ட தொடர் நிதி நிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்க அறிவிப்பு. குளித்தலை நகர  திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியானது.

இதனை அடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை நகர திமுகவினர் மற்றும் மகளிர் அணியினர் திமுக தேர்தல் அறிக்கையின் போது அளித்த வாக்குறுதியின் படி குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதற்க்கான அறிவிப்பு வெளியிட்டதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

 அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை வாழ்த்தி வாழ்த்து கோஷங்களையும் முழக்கமிட்டனர். குளித்தலை நகர நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள்,  வார்டு கவுன்சிலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *