தனி டாஸ்மாக் கடையை நடத்திய நபரை டர்… ஆக்கிய போலீசார்…!

ஆண்டிப்பட்டி அருகே சட்ட விரோதமாக மதுபாட்டிலை விற்பனை செய்தவர் கைது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தும்மக்குன்டு வைகை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக வருசநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது . 

இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தும்மக்குண்டு  விரைந்து  சென்று சோதனை செய்தனர் .  அப்போது தும்மக்குண்டு ஆற்றுப்பகுதியில் ஒரு புதரில்  மறைத்து வைத்து மதுவிற்பனை நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த இடத்தை சுற்றிவளைத்த போலீசார் மதுவிற்பனை செய்து கொண்டிருந்த தும்மக்குண்டை சேர்ந்த அன்பு என்பவரை கைதுசெய்து அவரிடம் இருந்த 180 மில்லி கொள்ளளவு உண்டா  15 ஆயிரம். மதிப்புள்ள 85 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் . 

மேலும் அவரை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதையடுத்து மேலும் ஆற்றுப்பகுதியில் யாராவது மது விற்பனை செய்கிறார்களா  என வருசநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வைகை ஆற்றுப் பகுதியில் சட்ட விரோதமான மதுவிற்பனை வெளிப்படையாக  நடைபெற்றது  இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *