அரசு வேலை வேண்டுமா? பல கோடி மோசடி செய்த பலே கில்லாடி கைது..!

அரசு வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்டோரிடம்  சுமார் 1 கோடியே 30 லட்ச்சம் ரூபாய்  மோசடி செய்த அரசு மாணவர் விடுதி காப்பாளர் அலெக்சாண்டர் என்பவர் கைது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

தென்காசி மாவட்டம் சின்ன வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர், இவர் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் விடுதிக்காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அலெக்சாண்டர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த அன்பு மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் அரசு வேலை வாங்கித் தராமல் அலெக்சாண்டர் ஏமாற்றியதுடன் பணத்தையும் திருப்பி தராமல் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அன்பு மற்றும் வினோத் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற பிரிவு காவல்துறையிடம் அலெக்ஸாண்டர் குறித்து புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் அலெக்சாண்டரை கைது செய்து விசாரணை நடத்தினர் 

இதில் அலெக்சாண்டர் தூத்துக்குடி, நெல்லை, சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அலெக்ஸாண்டரை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *