பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி, மாடுகளுடன் மறியல் போராட்டம்…?

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி திட்டமிட்டபடி வரும் 17 ம் தேதி பால் நிறுத்த போராட்டமும், கறவை மாடுகளுடன் மறியல் போராட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

 இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 42 ரூபாயாகவும், எருமை பாலுக்கு 51 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்காக கடந்த பத்தாம் தேதி முதல் கருப்பு பேட்ச் மற்றும் கருப்பு கொடி ஏற்றி கூட்டுறவு சங்கங்கள் முன் போராட்டம் நடத்தி வருவதாக கூறிய அவர் ஏற்கனவே அறிவித்தபடி வரும் 17ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்..

 மேலும் கூட்டுறவு சங்கங்கள் முன்பாக    கறவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *