இரு குழந்தைகளோடு கிணற்றில் தற்கொலை செய்துகொண்ட இக்கால நல்லதங்காள்

மோகனூரில் இரு குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்து விட்டு தாய் தற்கொலை, போலீசார் தீவிர விசாரணை. நாமக்கல் மாவட்டம் மோகனூர் புதுத்தெருவை சேர்ந்தவர் கோபி இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு குணமதி (34) என்ற மனைவியும், ரணவ் பிரியன் (5), சுஜித் பிரியன் (1 ) என இரு குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று இரவு குணவதி, கோபிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. குணவதி இரு குழந்தைகளையும் அடித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக குணவதியை குடும்பத்தினர் அனைவரும் திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த குணவதி இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். 

மூன்று பேரையும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் குணவதி, ரணவ் பிரியன்,சுஜித் பிரியன் ஆகிய 3 பேரும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் பார்த்த போது இரு குழந்தைகள் கிணற்றில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது மேலும் அருகே உள்ள மரத்தில் குணவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு குணவதி தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது.

இருப்பினும் குணவதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குழந்தைகளையும்  கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மோகனூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *