காய்ச்சலுடன் ப்ரெண்ட்ஷிப் வைக்குமா கொரோனா?…

வெங்கட்ராம்

தமிழகத்தில் H3N2 வைரஸ் பரவலாக பரவிக்கொண்டு இருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் அனைவரும் இரும்பிக்கொண்டு இருக்கின்றனர். அனைத்து அலுவலகத்திலும் வேலை சத்தத்தை விட இருமல் சத்தம் தான் அதிகமாக கேட்டுக்கொண்டு இருக்கிறது. மருத்துவமனை நிரம்பி வழிந்துகொண்டு இருகின்றன. இது போன்ற ஒரு காய்ச்சல் பரவல் மீண்டும் கொரோனா காலத்தை நினைவு படுத்துகிறது. அது அனைவரின் மனதிலும் ஒரு வித பயத்தை உண்டாக்குகிறது. முதலில் சாதாரண காய்ச்சல் தான் என்று கூறினாலும், பின்னாளில் அதன் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் புதுவித ஒரு பயம் உருவாகிகொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் காய்ச்சலோடு உருமாறிய ஓமைக்ரோன் வைரஸ் எதாவது பரவுகிறதோ என்ற எண்ணம் தோன்ற தொடங்கி உள்ளது. இப்படி எதாவது இருக்குமோ என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறை ஆய்வு செய்ய ஆலோசனை செய்துள்ளது. அப்படி இருப்பின் அதனை முன்பே கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்துவது அரசின் கடமை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *