தண்ணீர் தொட்டியை இடித்து தள்ளுங்க சார்… பரபரப்பில் பாபநாசம்
பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அருகே சாலை விரிவாக்கப் பணி செய்யப்பட்டதால் சாலையோரம் இருந்த குடிநீர் தொட்டி சாலையில் அமைந்துள்ளதால் , விபத்துக்கள் நேரிடும் அபாயம். உடனடியாக வேறு பாதுகாப்பான இடத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை கட்டிவிட்டு இதனை இடிக்க வேண்டும் என கோரிக்கை.
பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை — கணபதிஅக்ரகாரம் சாலையில் காவிரி ஆற்றில் இருந்த பழைய குறுகிய பாலத்திற்கு மாற்றாக தற்போது புதிதாக பாலம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை விரிவாக்க பணி நடைபெற்றது .
அப்போது சாலை ஓரத்தில் இருந்த கடைகள் ,வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. முன்பு சாலையோரம் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டி (OHT)அகற்றப்படாமல் அதே இடத்தில் உள்ளதால் தற்போது சாலை விரிவாக்க பணி செய்யப்பட்டதால் குடிநீர் டேங் சாலையில் அமைய பெற்றுள்ளது.
இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மீது மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. விபத்துக்கள் ஏற்படும் முன்னரே குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு பாதுகாப்பான இடத்தில் புதிதாக குடிநீர் தொட்டி (OHT) கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.