ஜெயிலுக்கு போக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விநோத நபர் கைது…

ஜெயிலுக்கு போக ஆசைப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது.. நான்காவது முறையாக கைது செய்தது போலீஸ்.. 

ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்தில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.. 

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக போலீசார் சோதனை நடத்தியதில் அது வெறும் புரளி என தெரியவந்தது.. செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், திருப்பூரில் பதுங்கி இருந்த சந்தோஷ் போலீசாரிடம் பிடிபட்டார்..

ஈரோடு நகரில் வெடிகுண்டு இருப்பதாக ஏற்கனவே 3 முறை மிரட்டல் விடுத்து கைதானவர் சந்தோஷ்.. சாப்பிட வழி இல்லாததால் ஜெயிலுக்கு போக ஆசைப்பட்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *