டிசைன் டிசைன்னா கெளம்பிட்டாங்க.. மின்வாரிய ஊழியர்போல ஆட்டயப்போட்ட மர்மநபர்…
உளுந்தூர்பேட்டையில் புதிய வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பது போல் பணம் வசூல் செய்யும் மர்ம நபர் மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் கடந்த சில நாட்களாக புதியதாக வீடுகளை கட்டி மின் இணைப்பு வழங்குவதற்காக காத்திருக்கும் வீட்டின் உரிமையாளரிடம் மர்ம நபர் ஒருவர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாகவும் மின் இணைப்பு வழங்க உரிய டெபாசிட் தொகை கட்ட வேண்டும் எனக் கூறி அந்த வீட்டின் உரிமையாளரிடம் ரூபாய் 4000 முதல் ரூபாய் 5000 வரை வசூல் செய்து கொண்டு மர்ம நபர் தலைமறைவாக உள்ளார் .
இதற்காக ஒரு மீட்டர் பெட்டியை கொடுத்துவிட்டு மின்வாரிய ஊழியர்கள் இரண்டு நாளில் வந்து மின் இணைப்பு வழங்குவார்கள் என கூறிவிட்டு இந்த பணத்தை வசூல் செய்து சென்று சென்றுள்ளார் அந்த நபர். வீட்டின் உரிமையாளர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு மின் இணைப்பு கொடுக்க இன்னும் மின்வாரிய ஊழியர்கள் வரவில்லை என அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது அந்த நபர் மின்வாரிய ஊழியர் அல்ல என்றும் மோசடியாக பணத்தை வசூல் செய்யும் நபர் என தெரிய வந்ததால் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களும் உளுந்தூர்பேட்டை மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்களும் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபோன்று நபர்கள் இனிமேல் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்