பகுதி நேர ஆசிரியர்களுக்கு பயம் வேண்டாம்… நம்பிக்கை தந்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் +2 வகுப்பு பொது தேர்வு எழுத கூடிய மாணவர்கள் தன்னம்பிக்கை உடன் எழுதுங்கள்.
பகுதி நேர ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டம் நிதி நிலை சரியாகிய பிறகு உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட லேப்டாப்புகள் வழங்குவது குறித்து லப்டாப் அல்லது டேப் வழங்கலாமா ஆலோசித்து வருகிறோம்
கடந்த ஆட்சியில் விட்டுச் சென்ற 1.75 லட்சம் மாணவர்களுக்கும் சேர்த்து வழங்க முடிவு செய்துள்ளோம் நிதி நிலை சரியாக சரியாக மாணவர்களுக்கு கொடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் பள்ளியில் மேஜைகள் உடைத்து ராகளையில் ஈடுப்பட்ட மாணவர்கள் 5 பேரை பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளோம் மாணவர்களின் பெற்றோர்கள் அழைத்து அறிவுரை கூறி உள்ளோம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.