பார்ட் டைம் வேலைக்காக ஆன்லைனில் பணத்தை ஆட்டயப்போட்ட நபர்கள்…
ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக லிங்க் மூலம் இழக்கப்பட்ட பணத்தை மீட்டு கொடுத்த சைபர் காவல் நிலையம்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் இரும்பை கிராமத்தைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் ஹரிஷ் சந்திரா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும், அதற்கு முன் பணம் செலுத்த கோரியும் டெலிகிராம் மூலம் அனுப்பபட்ட லிங்க்கில் சிறிது சிறிதாக மூன்று தவணையாக ரூபாய் ஒரு லட்சத்தி 90 ஆயிரம் செலுத்தியதாகவும்.
ஆனால் முழுவதுமாக ஏமாற்று வேலை செய்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்ததில் வாதியின் வங்கி கணக்கு ரூபாய் ஒரு லட்சத்தி 90 ஆயிரம் திருப்பி வரவு வைக்கப்பட்டது.
இன்று புகார்தாரரை நேரில் அழைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் மீட்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்