கல்குவாரி முறைகேடு செய்த அதிமுக நபரிடம் ஆர்டிஓ விசாரணை..
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அதிமுக ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், சட்ட விரோதமாக எக்கட்டாம்பாளையம் பகுதியில் கல்குவாரியில் பல கோடி ரூபாய் அளவிற்கு கனிமங்களை வெட்டி கடத்தியதாகவும், வழித்தடத்தை ஆக்கிரமித்து குவாரி அமைத்திருப்பதாகவும் புகார் எழுந்தது…
இது தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் வலியுறுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர்..
இது தொடர்பாக வட்டாச்சியர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முறைகேடு செய்திருப்பது உறுதியானது. இந்நிலையில், கல்குவாரி முறைகேடு தொடர்பாக ஈரோடு வருவாய் கோட்டாச்சியர் சதீஷ்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணனிடம் இன்று நேரில் விசாரணை நடத்தினார்.. மேலும் குவாரி தொடர்பான ஆவணங்களையும் கோட்டாச்சியர் ஆய்வு செய்தார்..