பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வாலிபர் போக்சோவில் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி இவர் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள உண்டு உறைவிடம் பள்ளியில் அங்கு உள்ள விடுதியில் தங்கி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் இவர் நேற்று அவருடைய தந்தைக்கு திதி கொடுத்துவிட்டு இன்று காலை அவருடைய சொந்த ஊரிலிருந்து பெரியநெசலூர் பள்ளிக்கு செல்வதற்காக வேப்பூர் கூட்டு ரோடு பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளார்
அப்போது பள்ளி மாணவி தன்னுடைய தாய்க்கு வேப்பூர் வந்து விட்டதாக தகவல் சொல்வதற்காக அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர் இடம் செல்போனில் தன்னுடைய தாய்க்கு போன் செய்ய கூறியுள்ளார் அந்த வாலிபர் பள்ளி மாணவியின் தாய்க்கு மிஸ்டு கால் மட்டும் கொடுத்து விட்டுவிட்டு உங்கள் அம்மா போன் எடுக்கவில்லை என்று பள்ளி மாணவி இடம் கூறியுள்ளார் பள்ளி மாணவி தன்னுடைய அம்மாவுக்கு ஏதோ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்
அந்த வாலிபர் எங்கே போகிறார் என்று கேட்டதற்கு விருதாச்சலம் செல்வதாக கூறியுள்ளார் அப்பொழுது அந்த வாலிபர் பள்ளி மாணவியை மோட்டார் சைக்கிள் அழைத்துக்கொண்டு வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அந்த வாலிபர் பள்ளி மாணவியை விருத்தாசலம் பாலக்கரையில் இறக்கிவிட்டு சென்று உள்ளார்
பின்னர் பள்ளி மாணவி தன்னுடைய தாய்க்கு அங்கிருந்தவர்களிடமிருந்து செல்போன் வாங்கி தகவல் கூறியுள்ளார் பின்னர் பள்ளி மாணவியின் தாய் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கின்றனர் அதன் பேரில் வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் பின்னர் வேப்பூர் போலீசார் பள்ளி மாணவியின் தாய் செல்போனுக்கு வந்த மிஸ்டு கால் வைத்து அந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை செய்ததில்
சேத்தியாதோப்பு அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த சிவமூர்த்தி மகன் ஜீவா வயது 24 என்பது தெரியவந்தது பின்னர் அவரை வேப்பூர் போலீசார் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக போக்சோவில் கைது செய்தனர் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.