யாதும் ஊரே யாவரும் கேளீர்…அடடா அமைச்சர்’ன இப்படி இருக்கணும்…
-வெங்கட்ராம்
இந்தியா முழுவதும் ஒரு போலி வீடியோ காரணமாக பரபரப்பாக இருக்கும் சூழலில், நேற்று அமைச்சர் செய்த ஒரு விஷயம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள் ஆக்கி உள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனை ஆய்வுக்குச் சென்றுள்ளார் அமைச்சர் வேலு. அங்கே இருக்கும் வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கருத்தை கேட்டறிந்தார். கலந்துரையாடல் முடிந்தவுடன் அவர்கள் அனைவரையும் அமர வைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து ‘நீலகிரியில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மாநில அரசு வடமாநில தொழிலாளர் பாதுகாப்புக்கான அனைத்து வசதிகளையும் செய்துள்ளது. எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் உடனே மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என, தொழிலாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் நாங்கள் பாதுகாப்புடன், மரியாதையுடன் நடத்தப்படுவதாக கூறினார்,’. அமைச்சரின் இந்த கனிவான செயலைக் கண்டு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.