ஆன்லைன் ரம்மி வலை…. தொடரும் தற்கொலை… மாறுமா இந்நிலை??
— வெங்கட்ராம்
பல அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக ஊடகத்தில் எச்சரித்தும், பல விழிப்புணர்வுகள் செய்தும், பல தற்கொலை செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்தும், எப்படி ஆன்லைன் ரம்மி விளையாட இவர்களுக்கு மனம் செல்கிறது என்று தெரியவில்லை.
ஆன்லைன் ரம்மி ஜாலி என்று இப்போது வாழ்க்கையில் காலி ஆகி இருக்கிறது தாம்பரத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபருக்கு. மருந்து நிறுவன பிரதிநிதியாக வேலை பார்க்க வினோத்திற்கே ஆன்லைன் ரம்மி அடிமைத்தனத்திலிருந்து வெளியே வருவதற்கான மருந்து கிடைக்கவில்லை போலும். அப்படி ஒரு மருந்து இருந்துவிட்டால் பாவம் தினம் தினம் தற்கொலை செய்து கொள்ளும் எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
அன்பான குடும்பம் நிம்மதியாக வாழ்க்கையை கழித்திருக்கலாம் ஆனால் பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்தது இன்று வாழ்க்கையை பழுது பார்க்கும் நிலவுக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. பசிக்கு கூட பத்து ரூபாய் கடன் வாங்க யோசிக்கும் மனது, ரம்மிக்கு என்றால் துணிந்து எத்தனை லட்சம் வேணாலும் கடன் வாங்கலாம் என்னும் மனநிலையை கொண்டு வந்து விடுகிறது. தமிழ்நாட்டு சட்ட சபையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் நிறைவேற்றியும் ஆளுநர் அதனை இன்னும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
அது கிடப்பில் கிடக்கும் ஒவ்வொரு நாட்களும், மனது படபடப்பில் இருக்கிறது அடுத்து என்ன அல்லது எத்தனை உயிர் போகுமோ என்று. அனைத்தையும் சட்டத்தால் தடுக்க முயன்றாலும் மக்களுக்கும் ஒரு சுய கட்டுப்பாட்டு தேவை என்பதை சுட்டி விரும்புகிறோம்