காவல் ஆய்வாளரின் மனைவி மர்ம மரணம்… கொலையா? என விசாரணை…!

கம்பம் நகர் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளரின் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தால் பரபரப்பு கொலையா என போலீஸ்சா|ர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் நகர்  போக்குவரத்து காவல்துறையில்  சிறப்பு சார்பு ஆய்வாளராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் தனது இரண்டாவது  மனைவி அமுதா உடன் கம்பம் மெட்டு காலனி இரண்டாவது தெருவில்  வசித்து வந்துள்ளார்.

இன்று காலை அவரது வீட்டு அருகில் இருந்தவர்கள் நீண்ட நேரமாக கதவு அடைத்திருப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அமுதா நிர்வாணமாக உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலினை தொடர்ந்து காவல் நிலைய  போலீசார் சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் இணை போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் வந்த போலீசார் பெண் கொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறித்து தடயவியல் துறை அதிகாரிகளை வரவழைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சார்பு ஆய்வாளரின் இரண்டாவது மனைவி இறந்து கிடப்பதை பார்த்த  உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அந்தப் பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

அமுதா உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில் இறந்த கிடந்ததால் அமுதா கொலை செய்யப்பட்டு இருக்கலாமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *