11 ஆண்டுகளாக வீட்டு சிறையில் இருந்த மகளை மீட்ட பெற்றோர்… கொடூர கணவன் கைது…!
ஆந்திராவில் மனைவியை 11 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைத்த கணவர் பெண்னின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரை வைத்து கணவர் வீட்டில் இருந்து பெண்னை மீட்ட உறவினர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் பாலாஜி மார்க்கெட் அருகே உள்ள மார்வாடி தெருவில் வழக்கறிஞர் கோதாரி மதுசூதன ராவ் வசித்து வருகிறார்.
மதுசூதன் ராவுக்கும் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த சாய்சுப்ரியாவுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2009ல் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக பிறந்த வீட்டிற்கு சென்ற சுப்ரியா கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற மதுசூதன் தந்திரமாக பேசி நம்ப வைத்து விஜயநகரம் அழைத்து சென்றார்.
அதன்பிறகு, மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்த மதுசூதன ராவ், சுப்ரியா போனில் பேசவோ, பெற்றோரை பார்க்கவோ அனுமதிக்காமல் வீட்டு காவலில் வைத்தார். அதன் பிறகு சுப்ரியாவிற்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் 11 ஆண்டுகளாக தங்களது மகள் சுப்ரியா உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என சந்தேகமடைந்த பெற்றோர் கண்ணீர் மல்க விஜயநகரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது எப்.ஐ.ஆர். இருந்தால்தான் வீட்டிற்கு வர வேண்டும் என்று மதுசூதன் கூறினர்.
இதனால் சுப்ரியா பெற்றோர் எஸ்பி தீபிகாவிடம் சென்று முறையிட்டனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சுப்ரியா குறித்த தேடுதல் வாரண்ட் பெற்று புதன்கிழமை மதுசூதன் வீட்டுக்குச் சென்ற போலீஸார் சுப்ரியாவை கணவரின் வீட்டுக் காவலில் இருந்து விடுவித்தனர்.