சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம நபர்கள் மீது விவசாயி புகார்…!

செங்கம் அருகே 8 லட்சம் மதிப்பிலான சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம நபர்கள் மீது விவசாயி காவல் நிலையத்தில் புகார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீதாண்டப்பட்டு அண்ணாநகர் கொல்லகொட்டா  பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சிவகுமார் என்பவர் 

தனக்கு சொந்தமான 1.50 ஏக்கரில் 40 சென்ட் நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதியுடன் 100 சந்தன மரமும் 150 செம்மரம் வைத்து வளர்த்து வந்துள்ளார் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான நான்கு சந்தன மரத்தை வெட்டி அருகிலுள்ள ஓடை வழியாக கடத்திச் சென்றுள்ளனர் 

காலையில் தோட்டத்தை சுற்றிப் பார்த்து வந்த சிவகுமார் அங்கு சந்தன மரம் நான்கு வெட்டப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக  செங்கம் காவல் நிலையத்தில்  வனத்துறையினருக்கும் இச்சமூம் குறித்து புகார் அளித்துள்ளார்

புகார் அளித்தும் காவல்துறையும் வனத்துறை சேர்ந்த ஒருவரும் விசாரணை மேற்கொள்ள வரவில்லை எனவும் மீதமுள்ள மரங்களில் பாதுகாப்பு குறித்தும் விவசாய சிவகுமார் வேதனையோடு தெரிவித்தார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *