ஓ.பி.எஸ்-ன் தாயார் இறுதி ஊர்வலம்.. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்பு

ஓ.பி.எஸ்-ன் தாயார் இறுதி ஊர்வலம் உறவினர்கள் ஆதரவாளர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்பு. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இன்று காலையில் இருந்தே அதிமுக ஓ.பி.எஸ்  ஆதரவாளர்கள், அமமுக,திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்பினர் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து  ஓ.பி.எஸ்-ன் தாயார் உடல் நல்லடக்கம் செய்வதற்காக பெரியகுளம் நகராட்சி மயானத்திற்கு தற்போது எடுத்துச் செல்லப்பட்டது. தென்கரை தெற்கு அக்ரஹாரத் தெருவில் இருந்து கிளம்பிய இந்த ஊர்வலம், தேனி – பெரியகுளம் சாலையில் உள்ள தேவர் சிலை, மூன்றாந்தல் காந்தி சிலை, தண்டுபாலம் வழியாக வடகரை சென்று அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரர் ஓ.ராஜா, ஓ.சண்முகசுந்தரம், மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. ஜெயபிரதீப் உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், பழனி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *