குடும்ப பிரச்சனைக்காக குழந்தைகளுடன் சாலை மறியல் செய்த இளம்பெண்.

குடும்ப பிரச்சினை காரணமாக உறவினர்கள் வீட்டின் சாவியை தர மறுப்பதாக கூறி இளம்பெண் சாலையில் அமர்ந்த சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மனைவி இளவரசி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மோகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். 

இளவரசி பரமக்குடியைச் சேர்ந்த ராம்கி என்பவர் உடன் தொடர்ப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறவினர்கள் பலமுறை கண்டித்துள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 22 ஆம் தேதி இளவரசி வீட்டிற்கு வந்த ராம்கியை அவரது உறவினர்கள் தாக்கியுள்ளனர். 

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இளவரசியின் வீட்டின் சாவியை உறவினர்கள் வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும் இதனால் குழந்தைகளுடன் கஷ்டப்படுவதாகவும் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து பரமக்குடி – முதுகுளத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் நிலையம் முன்புறமாக தனது இரு குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

போலீசார் உடனடியாக இளவரசியை அப்புறப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் பரமக்குடி தாலுகா காவல் நிலையம் முன்புறமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *