வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை வழக்கில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரண்…!

தூத்துக்குடியில் பட்டப் பகலில் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை செய்த வழக்கில் மூன்று பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற சரண் அடைந்தனர். தூத்துக்குடி   வழக்கறிஞர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் இருந்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள  தனது நகை அடகு கடைக்கு காரில் சென்றபோது  ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கீழே இழுத்துப் போட்டு ஓட ஓட விரட்டி அவரது அலுவலகம் முன்பு கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியது.

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று மாலை மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என் 4 -ல் நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில்

தூத்துக்குடியை சேர்ந்த வேல்முருகன், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ராஜரத்தினம்,திருவள்ளூரை சேர்ந்த இலங்கேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் வழக்கறிஞர் கொலை வழக்கில் தங்களை போலீசார் தேடுவதாக கூறி நீதிபதியிடம் சரண் அடைந்தனர்.

இதனை பதிவு செய்த நீதிபதி இந்த மூன்று பேரையும் மதுரை மத்திய சிறையில் மார்ச் 3ஆம் தேதி வரை சிறைகாவலி வைக்க உத்தரவு பிறப்பித்தார் இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *