வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து காவல்துறைக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்…!
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல்துறையை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க கோரி ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போராட்டம்.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நேற்று பிற்பகல் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் முன்விரோதம்காரனமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இதில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடியில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர் திரண்டு முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும்,
தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க தமிழக அரசு சிறப்பு ச சட்டம் இயற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.