என்ன மதிக்கிறதே இல்ல… செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய காவலர்…!
கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் மணிவேல் அவர் இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி ஆயுதப்படை அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்
இது குறித்த அவர் கூறுகையில் தனக்கு காவல்துறை பணியில் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் மேல் அதிகாரிகள் தங்களை மரியாதையுடன் நடத்துவதில்லை என்றும் தங்களை கேட்காமல் அவர்களாக பணி மாறுதல் செய்கின்றனர் இதனால் குடும்பத்தையும் கவனிக்க முடியாத சூழல் உள்ளது எனவே காவல்துறை பணியில் இருப்பதைவிட தான் தற்கொலை செய்து சாவது மேல் என தெரிவித்து வருகிறார் .
மேலும் தனக்கு முறையான மரியாதை கிடைக்கும் வரை தான் எங்கிருந்து இறங்கப் போவதில்லை என்றும் தன்னுடைய மேலதிகாரி வந்து தன்னிடம் உள்ள குறைகளை கேட்க வேண்டும் என்றும் ஆயுதப்படை காவலர் மணிவேல் வலியுறுத்தி வருகிறார்