மாணவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வழியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

கோவை அரசு சட்ட கல்லூரியில் ஹாரிதா என்ற மாணவி  கல்லூரியில் சேரும் பொழுது யூ.ஜி. சான்றிதழ் கொடுத்ததாகவும் அதை   காணவில்லை என்று கல்லூரி சார்பாக கடந்த மாதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சேக் முகம்து கல்லூரியில் சென்று கல்லூரி ஊழியர்களை தகாத வார்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் கல்லூரி ஊழியர்கள் முதல்வரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர். 

அதன் அடிப்படையில்  வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அது தொடர்ந்து இருவரையும் கல்லூரி சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.  காரணம் இல்லாமல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணிஸ் என்ற மாணவனை  சஸ்பெண்ட் செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக சட்டக் கல்லூரி வளாகத்தில் முன்பு மாணவர்கள் முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதில் நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அதில் மாணவர்கள் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். காரணம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் ஆணையை திரும்ப பெற வேண்டும். மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும், ‘விசாரணை குழுவில்’ மாணவர்கள் சார்பாக மாணவர்கள் இருக்க வேண்டும். 

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது இதைக் காரணம் காட்டி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றன. சட்ட கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது. 

பேரூர் சரக துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் மாணவர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் கல்லூரி முதல்வர் மாணவர்களை மிரட்டி எச்சரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்துவருகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *