மாற்றுத் திறனாளிகள் 100 நாள் வேலை கேட்டு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க உறுப்பினர்கள் இன்று நூறு நாள் வேலை கேட்டு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை ஒன்றிய அலுவலகமும் முன் நடைபெற்றது இதில் முக்கிய அம்சமாக வேலைக்கு செய்யும் அனைத்து மாற்றுத்திறனாளிகளின் வருகை பதிவு தனியாக பதிவு செய்ய வேண்டும் ,
அனைத்து ஊராட்சிகளும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசு ஆணை 52 படி தொடர்ச்சியாக 100 நாள் வேலை, நாலு மணி நேர வேலைக்கு அரசு நிர்ணயம் குழு ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் ,100 நாள் வேலை முழுமையாக முடிக்காமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும்,
மற்றும் அனைத்து மாற்று திறனாளிகளுக்கு வேலை செய்ய நீல நிற அட்டை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டன மேலும் சில ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் கேளிக்கும் கிண்டலுக்கும் உல்லாவதை தடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது