என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிளாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்…!
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த என் டி பி எல் ஒப்பந்த தொழிளாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ், இன்று முதல் பணிக்கு திரும்பினர்.
தூத்துக்குடியில் என் டி பி எல்லில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த எட்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் தொழிலாளர் துறை தலைமை துணை ஆணையர் தலைமையில் மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்எல்சி அதிகாரிகள் ஆகியோர் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினையை வரும் மே மாதம் ஐந்தாம் தேதிக்குள் அதாவது 75 நாட்களுக்குள் அவர்களது கோரிக்கையை பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.
20 நாட்கள் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் மற்றும் இஎஸ்ஐ பிஎப் ஆகியவை பிடித்தம் செய்வது,
அரசு விடுமுறை மற்றும் பன்டிகை காலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதை அடுத்து இன்று காலை தொழிலாளர்களிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு குறித்து எடுத்துக் கூறினர் இதைத் தொடர்ந்து தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
ஒப்பந்த தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 8 நாட்களில் என் டி பி எல் நிர்வாகத்திற்கு சுமார் 90 கோடி ரூபாய் அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது