நாய்கள் கடித்து குதறியதில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்…!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த நான்கு வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்த சிறுவன் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தெலங்கானா மாநிலம் ஆம்பர்பேட்டையில் நடந்த கொடூரம். தெருநாய்கள் தாக்கியதில் நான்கு வயது குழந்தை உயிரிழந்தது. நிஜாமாபாத் மாவட்டம் இந்தல்வாய் மண்டலத்தை கங்காதர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஹைதராபாத் வந்தார். தனது மனைவி, ஆறு வயது மகள் மற்றும் நான்கு வயது மகனுடன் பாக் அம்பர்பேட்டையில் வசித்து வருகிறார்.
அம்பர்பேட்டை சந்திப்பு சாலையில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் கங்காதர் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது குழந்தைகளை கங்காதர் தனது கார் சர்வீஸ் சென்டருக்கு அழைத்துச் சென்றார். மகளை பார்க்கிங்கில் உள்ள கேபினில் தங்க வைத்தார். 4 வயது மகன் பிரதீப்பை அழைத்துக் கொண்டு சர்வீஸ் சென்டருக்குள் சென்றார். அங்கு பிரதீப் விளையாடிக் கொண்டிருந்த போது கங்காதர் வேறொரு நபருடன் பணி நிமித்தமாக வேறு இடத்திற்குச் சென்றார்.
அங்கு சிறிது நேரம் விளையாடிவிட்டு தனது மூத்த சகோதரியிடம் செல்ல அந்த தெரு வழியாக பிரதீப் நடந்து சென்றபோது தெருநாய்கள் பின்தொடர்ந்தன. சிறுவன் பயந்து அங்கும் இங்கும் ஓடினான். இருப்பினும் தெரு நாய்க்கள் ஒன்றாக கூட்டு சேர்ந்து சுற்றி வளைத்து பிரதீபை கடித்து குதறியது. நாய்கள் கடித்து தாக்கியதில் பிரதீப் அதே இடத்தில் இறந்தான் அவ்வழியாக வந்த பொது மக்கள் வருவதற்குள் பிரதீப் இறந்த நிலையில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது நாய்கள் தாக்கியதில் சிறுவன் இறந்தது தெரிய வந்தது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறி வரக்கூடிய நிலையில் தெரு நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டாலும் விலங்கியல் ஆர்வலர்கள் தெரு நாய்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சட்டச்சிக்கலை கொண்டு வருவதால் மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதோடு பல இடங்களில் இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருப்பது அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்