தற்கொலையை தடுக்காத காவலர் மீது நடவடிக்கை, நிவாரணம் தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை

அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி தற்கொலையின் போது பணியில் இருந்த அனைத்து காவலர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்,ரூ.25 லட்சம் நிவாரணமாக அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்  என  நிலக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு  விவசாய சங்கம் போராட்டத்தில் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த 7 ஆம் தேதி கன்னிமார் நகரை சேர்ந்த விவசாயி பாண்டி என்பவர் தனது புகாருக்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல் நிலையத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.   

இந்த தற்கொலைக்கு நீதி கேட்டு நிலக்கோட்டை விவசாய சங்கம் சார்பாக நிலக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் வாயிலாக ரூ.25 லட்சம் நிவாரணமாக அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ,  

இந்த வழக்கில் ஈடுபட்ட  அனைத்து காவலர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தமிழ்நாடு அரசு பாண்டியின் மகன் சதீஸ் கண்ணனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்,  மேலும் பாண்டியின் நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,  நிலத்தை பாதுகாக்கவும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

பின்னர் நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *