நீதிமன்றத்தில் தம்பிக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்த அண்ணன் கைது…!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக சீர்காழி போலீசார் வழுதலைகுடி கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்,
இந்த வழக்கின் விசாரணை தற்போது சீர்காழி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு அசோக் ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்கு பதில் அவரது அண்ணன் குணசேகரன்.43. என்பவர் ஆஜராகி ஆள் மாறாட்டம் செய்து,தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் குணசேகரனை கைது செய்து சீர்காழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தம்பி அசோக் வேலைக்காக வெளிநாடு சென்றதால் அவருக்கு பதில் அவரது அண்ணன் குணசேகரன் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி ஆள் மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட குணசேகரனை கைது செய்தனர், மேலும் ஆள்மாறாட்டம் செய்ய உதவி வக்கீல் குமாஸ்தா திருஞானம் மற்றும் சீர்காழி கோர்ட் போலீஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆள்மாராட்டம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.