பெண்கள் மட்டுமே வடம்பிடித்திழுத்த தேர் திருவிழா..!
தருமபுரி, குமாரசுவாமிபேட்டையிலுள்ள அருள் மிகு சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இநத ஆண்டிற்கான தைப்பூச தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது, மறற ஊர் தேர்திருவிழாக்களில் ஆண்கள் தேரினை இழுப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையல், இந்த கோவில் தேர் திருவிழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்று முருகனுக்கு அராகரோ, கந்தனுக்கு அரோகரா முழக்கமிட்டபடி அலங்கரிக்கபட்ட தேரினை இழுத்து வரப்படுவது சிறப்பாக பார்க்கபடுகிறது,
அலங்கரிக்கபட்ட தேரில் குடும்ப சமேதரமாய் பவனி வரும் சாமியை தரிசனம் செய்யும் பெண் பக்தர்கள், உப்பு, மிளகு வாரி இறைக்கின்றனர், இப்படி செய்யும் போது, முருக பெருமான் தங்களது கஷ்டங்களை நீக்கியும், மனதில் நினைத்து வைக்கும் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றி தருகிறார் முருக பெருமான் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
கொரானா தடையினால் கடந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்று வடம்படித்திழுக்கும் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் தேரினை இழுத்தனர்