வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக 6 கோடிக்கு மேல் மேன் வர்த்தகம் பாதிப்பு

தூத்துக்குடி வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மூன்றாவது நாளாக தூத்துக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை சுமார் ஆறு கோடி ரூபாய் அளவு  வர்த்தகம் பாதிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மேலும் வங்க கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது மேலும் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் இன்று  பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத் துறை சார்பில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதை அடுத்து முன்றாவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதேபோன்று திரேஷ் புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

முன்றாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் தூத்துக்குடி  மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 6 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *