“உலகமே இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது” – குடியரசுத் தலைவர் உரை!
குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு: இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா; உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது எனக்கூறினார்.
ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை இந்தியா வழங்கி வருகிறது என்றார்.
தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் பெரும்பான்மையான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இன்று நாட்டில் உறுதியான, அச்சமற்ற தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் அரசு ஆட்சியில் உள்ளது.