ஈரோட்டில் மூடப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மீண்டும் திறப்பு.. 

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்த தலைவர்களின் சிலை இன்று காலை துணியால் மூடப்பட்டது..

ஜெயலலிதா எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, பெரியார் கலைஞர் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகிய ஆறு பேரின் உருவச் சிலைகள் மூடி மறைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இதில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மட்டும் மீண்டும் திறக்கப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இவர்களது சிலையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் மீண்டும் திறந்து விட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *