காவியில்லா திருவள்ளுவர் திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

RN Ravi

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தை மாதம் 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. மரியாதை செலுத்திய பின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆளுநருக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *