பள்ளிக்கல்வியைப் பாதுகாக்க கோரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…!

ஆசிரியர்கள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசு பள்ளிக் கல்வியை பாதுகாக்க வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கவன் ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆரம்ப பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி முறையான அனைத்து நிலையிலும் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரிலோசந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் கந்தசாமி ஆகிய தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி:- ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் மாணவர்களிடையே போதைப் பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

பணி நிறைவு பெற்ற பின் வாழ்வாதாரம் காக்க பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை. முன் வைத்தனர்.பின்பு ஆசிரியர்களுக்கான கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

பகுதி நேர ஆசிரியர்களை முறையான கால ஊதியத்தில் பணி நிரந்தர செய்ய வேண்டும்.மருத்துவ விடுப்புக்கான சான்றிதழ்களை அரசு மருத்துவரிடம் மட்டுமே பெற வேண்டும் என்று அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *