எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விஆண்டின் தொடக்கத்திலேயே கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட கோரிய வழக்கு உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து செயல் படுத்துவது குறித்து கண்காணிக்கவும்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விஆண்டின் தொடக்கத்திலேயே கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிடக்கோரி வேதாச்சலம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது.

இதையடுத்து நீதிபதிகள், பொருளாதார சிக்கல்களால் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். 

எனவே, வருங்காலங்களில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்” என உத்தரவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *