என்ஐஏ அதிகாரிகள் என பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்த பாஜக நபர்… கொத்தாக தூக்கிய போலீசார்
சென்னை பிராட்வேயில் என் ஐ ஏ அதிகாரிகள் எனகூறி பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
சென்னை பிராட்வேயில் உள்ள மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஜமால் இவர் சென்னை பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் கடந்த வாரம் காலை மலையப்பன் தெருவில் உள்ள ஜமாலின் வீட்டிற்கு நான்கு பேர் கொண்ட கும்பல் தங்களை என் ஐ ஏ அதிகாரிகள் என்றும் உங்களது வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறி சோதனை நடத்தியுள்ளனர்
வீட்டில் இருந்த பல லட்ச ரூபாய் பறித்துச் சென்றுள்ளனர் அதேபோல் கடையிலும் சோதனை நடத்த வேண்டும் என கூறி கடையில் இருந்த பல லட்ச ரூபாயும் மொத்தம் 20 லட்ச ரூபாய் கொள்ளையடித்துச் சென்றனர் இந்த வழக்கு தொடர்பாக முத்தையால் பேட்டை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் நேற்று இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்
இதில் பாஜக வடசென்னை மாவட்ட நிர்வாகி வேலு, ரவி, விஜயகுமார், தேவராஜ்,புஷ்பராஜ், கார்த்திக் உள்ளிட்ட 6 பேர் சரண் அடைந்துள்ளனர். கொள்ளையர்கள் அப்துல் ஜமாலின் வீட்டில் கொள்ளை அடித்துச் சென்ற கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் கொள்ளையர்கள் அப்துல் ஜமாலின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து வெளியே சென்று மலையப்பன் தெரு வழியாக தப்பித்தது உள்ளிட்ட அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனார்.