ஓட்டுனர் பற்றாகுறையால் பேருந்தை கட் செய்த அதிபுத்திசாலி அதிகாரிகள்… போராட்டத்தில் குதித்த மக்கள்

Bus fare hike

பழங்குடியின கிராமத்திற்கு ஓட்டுனர் இல்லை என பேருந்து நிறுத்தம். பழங்குடியின மக்கள் பேருந்து முன்பு அமர்ந்து போராட்டம்.

குன்னூரில் இருந்து பழங்குடியின கிராமத்திற்கு ஓட்டுனர் இல்லை என கூறி அரசு பேருந்து நிறுத்தம். பழங்குடியின மக்களை அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக கூறி பழங்குடியின மக்கள் பேருந்து முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து பக்காசூரன் பழங்குடியின கிராமங்களுக்கு அரசு  பேருந்து இயக்கப்படுகிறது.   காலை மற்றும் மாலை நேரங்களில் பழங்குடியின கிராமத்திற்கு அரசு பேருந்தை முறையாக இயக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

அரசு அதிகாரிகள் பழங்குடியின மக்களை புறக்கணித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இன்று மாலை  குன்னூர் பகுதியில் இருந்து பக்காசூரன் பகுதிக்கு செல்லும் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லை என்று இயக்காமல் இருந்துள்ளனர். 

இதனால் பழங்குடியின மக்கள் தங்களது பகுதிக்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர்.தொடர்ந்து பேருந்து முன்பு  சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை இயக்குவதாக உறுதியளித்த நிலையில் பழங்குடியின மக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *