அத்திகடவு திட்ட பணிகளில் அதிரடி காட்டிய திமுக அரசு… 

அத்திகடவு அவினாசி திட்ட பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி.. 

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். நேரில் சென்று ஆய்வு செய்திருக்கின்றோம்.  இதில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  முதலாவது பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் சில நிலங்களில் வேலை செய்வதற்கு அனுமதி பெறுவதில் சிக்கல் இருந்தது.  விவசாயிகளுடன் பேசி நிலத்தை பெற்றதால் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மொத்தமுள்ள 106.8 கிமீ தொலைவிற்கும் பிரதான குழாய்கள் அமைக்கும் பணியும், 6 நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளன. குளங்களுக்கு 958 கிமீ அளவிற்கு இணைப்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

திட்டத்தில் மொத்தமுள்ள 1045 குளங்களில் 600 குளங்களில் நீர் நிரப்ப தேவையான பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளன. எஞ்சிய 445 குளங்களுக்கு நீர் நிரப்ப தேவையான பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். இதில் சில குளங்கள் மட்டுமே காலதாமதம் ஏற்படும். 

அத்திகடவு அவினாசி திட்டத்தில் முடிவுற்ற பணிகளை கொண்டு ஜனவரி மாதத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.. அதிமுக ஆட்சியில் தொய்வாக கிடந்த இந்த பணிகளை திமுக ஆட்சிக்கு வந்த பின் வேகப்படுத்தினோம். விவசாயிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று பேசி நிலத்தில் அனுமதி பெற்றோம். 

விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து அதிமுக ஆட்சியில் பேசப்படவில்லை. தற்போது இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *