ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நியாய விலைக்கடை, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்,
நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத அங்கன்வாடி சத்துணவு, டாஸ்மாக், துப்புரவு பணியாளர்கள், நியாய விலைக்கடை, தூய்மைக்காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், பட்டு வளர்ச்சித்துறை பணியாளர்கள், கிராமப்பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஆகியோர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும்,
பொது விநியோகத்திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கிட வேண்டும், அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்