சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவனை போக்சோவில் போட்ட போலீசார்

Harassment

சாலையில் நடந்து சென்ற சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆண் கைது. தேவதானப்பட்டி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி பகுதியில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுமியை முத்துச்சாமி (வயது 49) என்ற ஆண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்  அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் முத்துச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு பின்பு போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவு பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *