கனமழை பாதிப்பு: தரை பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் அரகண்டநல்லூர்- திருக்கோவிலூர் இணைக்கும் தரை பாலம் நீரில் மூழ்கியது போக்குவரத்து துண்டிப்பு;
சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவான 119 அடியில் தற்போது 117 அடி தண்ணீர் எட்டி உள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது, வினாடிக்கு 12.000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வருகிறது.
இதனால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் காணப்படுகிறது. இதில் குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம் -அரகண்டநல்லூர் இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது
இதனால் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரகண்டநல்லூர், உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் மணம்பூண்டி வழியாக 5-கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருக்கோவிலூருக்கு சென்று வருகின்றனர்,
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை ஒட்டி, சாத்தனூர் அணை திறக்கப்பட்டு தற்போது தென்பெண்ணையாற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், தடுப்பணைகளில் இந்த தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையில், தற்போது இந்த தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது .
திருக்கோவிலூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலமாக தென்பெண்ணை ஆற்றல் கரையோர உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது