கால்வாய்க்கு தண்ணீர் திறக்கக்கூடாது போலீசாருடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு

Vellore

கன்னடியான் கால்வாய் இருந்து வெள்ளநீர் கால்வாய்க்கு வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என விவசாயிகள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். போலீசார் உடன் தள்ளுமுள்ளு தண்ணீரைக் கொண்டு சென்றாள் குடும்பத்தோடு வெள்ளநீர் கால்வாய் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கன்னடிபான் கால்வாயில் இருந்து வெள்ளநீர் கால்வாய்க்கு வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வெள்ளோட்டம் என்ற பெயரில் தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ளநீருக்காய் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு சென்றாள் குடும்பத்தோடு வெள்ள நீர் கால்வாய்க்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி வெள்ள நீரில் கண்ணடியன் அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு நம்பியாறு மற்றும் தாமிரபரணி நதிகளுடன் எனக்கு வெள்ளை நீர் கால்வாய் ஏற்படுத்தி  தாமிரபரணி கண்மணி கண்மணி யாரு நம்பியார் நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 369 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் தொடங்கப்பட்டது.

பின்னர் பல்வேறு காரணங்களால் திட்டப் பணிகள் முடக்கப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 872 கோடி மதிப்பீட்டில் திட்டம் மறு  மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 32 கிராமங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 கிராமங்களும் 50 கிராமங்கள் பயன் பெறும்.

நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில்  நெல்லை கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் வெள்ளநீர் கால்வாய் பணிக்காக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அவ்வாறு மழை பெய்து வெள்ளநீர் ஏற்பட்டால் 1300 கன அடி தண்ணீர் தற்காலிகமாக சோதனை ஓட்டமாக இந்த வெள்ளை நீர் கால்வாயில் செல்வதற்கான பணிகள் முடிக்கு விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாபநாசம் அணையில் இருந்து 1300 கன அடி தண்ணீர் சோதனை ஓட்டமாக வெள்ளை நீர் கால்வாய் பணிகளுக்காக திறந்து விடப்படும் என கன்னடியன் கால்வாய் விவசாயிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தமிழக ,சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சபாநாயகர் அப்பாவு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பணிகளை ஆய்வு செய்து… இந்த பருவ மழையில் வெள்ள நீர் வந்தால் அதனை 1300 கன அடி தண்ணீர் இந்த வெள்ள நீர் கால்வாயில் சோதனை ஓட்டமாக செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்..

இதற்கு கன்னடியான் கால்வாய் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து கன்னடியான் கால்வாய் பாசன விவசாயிகள் பகுதி முன்னேற்ற சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்

இந்த போராட்டத்திற்கு கன்னடியான் கால்வாய் பாசன விவசாயி பகுதி முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்ப நயினா ர் ஆகியோர் தலைமையில்  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர் இதைத்தொடர்ந்து அவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு கொடுத்தனர் 

இன்றைக்கு நிலவரப்படி பாபநாசம் அணைக்கட்டில் 82 அடி தான் தண்ணீர் இருக்கிறது இந்த நிலையில் 75 கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீரை சோதனைக்காக எடுக்கும்போது அணைக்கட்டில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் சென்று விடும் மேலும் பிசான சாகுபடிக்காக காத்திருக்கும் கன்னடியான், கோடை மேலழகியான், நதி யுண்ணி மற்றும் தாமிரபரணி ஆற்று படுக்கையில் உள்ள மற்ற பிற கால்வாய் பாசன பகுதி விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளனர் 

எனவே சோதனை என்ற பெயரில் தண்ணீர் திறப்பதை நிறுத்தவும் கன்னடியான் கால்வாயில் அடைந்துள்ள அமல செடிகளை அகற்றி கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *